தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 May 2023

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 13 நபர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம் பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை நேரடியாக சென்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது கஞ்சா உள்ள போதை பொருட்கள் அதிகமாக இளைஞர் நடமாட்டத்தில் உள்ளது இதனை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது அதற்கு இந்த சம்பவமே உதாரணம் இந்த முழு சம்பவத்திற்கும் முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் மதுக்கடைகளை அதிகரித்து மது குடிப்பதை ஊக்குவிக்கிறது இந்த அரசு இதுகுறித்து சட்டசபையில் பலமுறை எடுத்துரைத்தும் இந்த அரசு அதனை கண்டு கொள்ளவில்லை சம்பவம் நடந்ததை தொடர்ந்து 2000 வழக்குகள் பதிவு செய்து 1500 கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நடவடிக்கைகளை ஏன் முன்பே எடுக்கவில்லை எடுத்திருந்தால் இந்த உயிர் பலி நடந்திருக்காது என்று தெரிவித்தார். உடன்  எம்.பி. சிவி.சண்முகம், முன்னால்  சுகாதாரத் துறை  அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அதிமுக கட்சி யினர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad