விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது, ஆடிப்பூரத்தை முன்னிட்டு 22/7/2023/சனிக்கிழமை அன்று காலை ஒன்பது மணிக்கு மூலவர் ஸ்ரீ பூமி நிலா தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு புஷ்பம் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தாயாருடன் அருள் பாலிக்கிறார், மாலை ஆறு மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி உடன் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண உற்சவ மகோச்சவ விழா நடக்கிறது பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உள்புறப்பாடு நடக்கிறது.
பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் அர்த்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் இந்த விழா ஏற்பாடுகள் செய்பவர் வெங்கடேஷ் பாபு பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment