விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுகவின் ஆதிதிராவிட நல குழு அணியின் மத்திய மண்டல ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 21 September 2023

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுகவின் ஆதிதிராவிட நல குழு அணியின் மத்திய மண்டல ஆலோசனைக் கூட்டம்.

ஆதிதிராவிடர் நலக் குழு அணியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய  மாவட்டங்களின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்  விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மாநிலச் செயலாளர் ஆ. கிருஷ்ணசாமி எம். எல். ஏ தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி எம். எல். ஏ முன்னிலையிலும் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் செயலாளர் செ.புஷ்பராஜ் EX. MLA வரவேற்புரையாற்றினார்.  

கூட்டத்தில் மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் சிறப்புரையாற்றினார்.  கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது மற்றும் கருத்தரங்கம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில இணைச் செயலாளர் மருதூர் இராமலிங்கம் EX. .MLA   மாவட்ட பொருளாளர் இரா ஜனகராஜ்,  விழுப்புரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் T. N. A. தமின், ஆதிதிராவிடர் நலக்குழு அணி அமைப்பாளர் செல்வ பிரேம், தலைவர் வேலுஜி, துணைத் தலைவர் இருசப்பன், துணை அமைப்பாளர் திராவிட மணி, சூப்பர் பழனி, இராஜிவ்காந்தி, ஓம் சிவ சக்திவேல், தர்மலிங்கம் உள்ளிட்ட மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad