விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயர் மின் அழுத்தம் தாக்கி மூன்று வயது குழந்தை பலி. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 September 2024

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயர் மின் அழுத்தம் தாக்கி மூன்று வயது குழந்தை பலி.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எலவலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் இவர் கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் தலைமை சமையலறாக உள்ளார் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் எலவலப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சரவணன் கருத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் அதில்  மூத்த மகன் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார், அவரது இளைய மகன் இசை அமுதன் வயது (3) தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். 


அப்பொழுது திடீரென அவர் அவனது அலற சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மூச்சு பேச்சுற்ற நிலையில் இருந்தார். இது அடுத்து அந்த குழந்தையை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். 


அப்பொழுது முதல் கட்ட விசாரணையில் அவர் அருகே இருந்த டேபிள் பேன் உயிரை  ஒயரைப் பிடித்து கடித்துள்ளதால் அதிலிருந்து வந்த உயர் மின்னழுத்தம்  தாக்கி மூன்று வயது குழந்தை இசை அமுதன் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad