விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி அண்ணா நகர் குளக்கரை தெருவை சேர்ந்த கன்னியப்பன் கூலித்தொழிலாளி வயது 39 பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர்.
இவரது மகன் சுந்தர்ராஜ் வயது 11 அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தரராஜ் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் சாதி பெயரை சொல்லி அழைத்து கிண்டல் செய்து அவமானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சுந்தராஜன் அவரது தந்தையுடன் தெரிவித்தார். சகமாணவர்கள் என்பதால் தந்தையும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவன் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்தார் இதனால் மன உளைச்சல் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.
அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிறுவனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் மண்ணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மாணவனின் சொந்த ஊரான காட்டு ச்சிவிரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியப்பன் தன் மகனை தீயில் தள்ளி விட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்ததின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment