நீர்நிலை புறம்போக்கு இடத்தில் சவுக்கு மரம் அகற்றுவது குறித்து ஆலோசனைக்கூட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

நீர்நிலை புறம்போக்கு இடத்தில் சவுக்கு மரம் அகற்றுவது குறித்து ஆலோசனைக்கூட்டம்.

திண்டிவனம் அருகே நீர்நிலை புறம்போக்கு இடங்களில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மரங்களை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது, திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் வசந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன் ராவ் மற்றும் மயிலம் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீர் வள ஆதார துறை. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர்கள் நகராட்சி அலுவலர்கள். பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். 


நீதிமன்ற உத்தரவு படியும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட பசுமைக் குழு பரிந்துரையின் பேரில் அன்னம்புத்தூர் கீழ் சித்தாமூர் ஓமந்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள நீர்நிலை புறம்போக்கு 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மரங்களை அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயிரிடப்பட்டுள்ள அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது 10 நாட்களுக்குள் மரங்களை அகற்ற வேண்டும் இல்லையேல் பொதுப்பணித்துறை உடன் அகற்ற நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 


மேலும் உள்ள பல்வேறு பகுதிகளில்782 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களில் மாதந்தோறும் 50 ஹெக்டர் நிலங்களை மீட்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதேபோல் திண்டிவனம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்துள்ள அவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad