நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.எல்.ஏ., அர்ஜுனன் ஆய்வு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.எல்.ஏ., அர்ஜுனன் ஆய்வு.

திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது இப்பணியை திண்டிவனம் எம்.எல்.ஏ அர்ஜுனன் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து தலைமை மருத்துவர் சாந்தகுமாரியிடம் ஆலோசித்தார் உடன் கண் மருத்துவர் ரவிச்சந்திரன். மற்றும் அரசு மருத்துவ அலுவலர்கள் ஊழியர்கள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  ஓங்கூரில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார் அப்போது நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் விவசாயிகள் கொண்டுவந்த 4000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டதாகவும் எம்.எல்.ஏ., அர்ஜுனன் அவர்களிடம் விவசாயிகள் முறையிட்டனர். மேலும் ஓங்கூரில் உள்ள ஆரம்ப தொடக்கப்பள்ளியில் சுற்றுப்புற சுவர்களையும் பள்ளி பராமரிப்பு குறித்து தலைமை ஆசிரியரிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட பள்ளி மாணவர்களை உணவுத் தரம் குறித்து உணவை சுவைத்துப் பார்த்து பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களிடமும் ஆலோசித்தார் பள்ளி முழுவதும் ஆய்வு செய்தார்.

இதில் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ஏப்பாக்கம் ராஜசேகரன், திண்டிவனம் முன்னாள் திண்டிவனம் நகராட்சி சேர்மன் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் நடராஜன், சித்தாமூர் முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி உதயகுமார், ஒலக்கூர் ஒன்றிய மாணவரணி செந்தாமரைக்கண்ணன், மானூர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் இந்திரா முத்துகிருஷ்ணன், பிரகாஷ், அஜித், முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,  

No comments:

Post a Comment

Post Top Ad