புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பாக சிறப்பு கருத்தரங்கம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பாக சிறப்பு கருத்தரங்கம்.

திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பாக career Guidance  program with intra collegiate meet  கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் திரு குமரன் HR(TCS) அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். இதில் அவர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் சவால்களை எதிர்கொள்வது பற்றி தகவல்களை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் முனைவர் பீட்டர் பால்ராஜ் அவர்களும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் சத்தியா அவர்கள் சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை வழங்கினார். மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஹேமா வரவேற்புரையும் ஹேமாவதி நன்றியுரை வழங்க துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பித்து நடத்துனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad