முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்களை நாடி இலவசமருத்துவ முகாம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 October 2022

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்களை நாடி இலவசமருத்துவ முகாம்.

திண்டிவனம் அடுத்த தென் பசியார் கிராமத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்களை நாடி இலவசமருத்துவ முகாம் நடைபெற்றது


இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை S.ரேவதி அரிவாசுBsc.B.Ed. ஊராட்சி மன்ற தலைவர் செய்திருந்தார். R.கன்னியம்மாள் ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை வகித்தார். A. பழனி ஒன்றிய துணை பெருந்தலைவர் தலைமை தாங்கினார். முகமை இரா. தயாளன். ஒன்றிய பெருந்தலைவர் துவக்கி வைத்தார். இம்முகாமில் நாட்பட்ட காய்ச்சல், இருமல், சளி, சர்க்கரை நோய், தைராய்டு, மஞ்சள் காமாலை, பித்தப்பை கற்கள், போன்ற நோய்களுக்கு iMED சிறப்பு பல் நோக்கு மருத்துவமனை மருத்துவர்கள்Dr.N.M.K. வினோபாரதி M.D.,Dr. முரளிதரன்M.B.B.s., Dr. சுஸ்மிதா.,M.B.B.s., மேலாளர் க. சுகானந்தம், மற்றும் செவிலியர்கள் பொதுமக்களை பரிசோதித்து இலவச மருந்து மாத்திரைகளை வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் K. சத்தியவாணி கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் கிராம நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் V. கதிர்வேல், அவ்வை சேகர், கோவிந்தசாமி ,ஏழுமலை, ஹரிகிருஷ்ணன், சிங்கனூர் வரதராஜன், நீர்பாசனத் தலைவர் விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள்.லட்சுமி, ஜெயந்தி, ராஜ்குமார், தளபதிவீரா,மீனாட்சி, மாரியம்மாள், சுலோசனா, வீராசாமி, மற்றும் ஊர் பொதுமக்கள்என ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் இம்மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad