தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் 6000-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 2009ல் கௌரவ விரிவுரையாளர்களை அப்போதைய கலைஞர் தலைமையிலான அரசு நியமனம் செய்தது. அதனை தொடர்ந்து வந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிளான அரசு அரசாணை 56ஐ வெளியிட்டு பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. தற்பொழுது அமைச்சர் பொன்முடி அரசாணை 56ஐ ரத்து செய்து அனைவருக்கும் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment