திண்டிவனத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த திரு. அமீத், அவர்கள் சென்னை பெருநகர தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டார் இதனையடுத்து திருவண்ணாமலையில் பயிற்சி ஆட்சியராக இருந்த திரு. கட்டா ரவி தேஜா, திண்டிவனம் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இவர் திண்டிவனம் சார்ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் உடன் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், திண்டிவனம்வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன், சிப்காட் வட்டாட்சியர் பிரபு வெங்கடேஸ்வரன், மற்றும் சார் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக திண்டிவனம் செய்தியாளர் சிவ.வெங்கடேசராவ்.
No comments:
Post a Comment