திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்ப்பு முகாம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, அவர்களின் தலைமை நடைபெற்றது இந்த சிறப்பு முகாமில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கினார்.

மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, அவர்கள் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்தார் 20-க்கும் மேற்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார், உடன் திண்டிவனம் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment