விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தின விழா. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 November 2022

விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தின விழா.


விழுப்புரம் சட்டக்கல்லூரியில்  சார்பில் Dr. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் Dr. தங்கரமணி வரவேற்றார் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் SP ஸ்ரீநாதா கலந்து கொண்டார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் திண்டிவனம் செ.பாலாஜி Bsc.B.L அவர்கள் கலந்து கொண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசுகையில் ஒரு புதிய இந்தியாவுக்கான பரிமாண வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் எந்த சாதியில் பிறந்தாலும் எந்த மதங்களை பின்பற்றினாலும் நீயும் நானும் உடன்பிறப்பு தான் என்ற உணர்வு நமக்குள் வரவேண்டும் பிறப்பின் அடிப்படையில் கல்வி வேலை அதிகார வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்கின்ற கோட்பாடு தான் சமூக நீதி என்றார்.


விழாவில் விழுப்புரம் முன்னாள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு விஜயகுமார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்திரு. வசந்தகுமார் சட்டக் கல்லூரி துணை முதல்வர் திரு. ராமஜெயம்  சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad