திண்டிவனத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனைக் கூட்டம்!. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

திண்டிவனத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனைக் கூட்டம்!.


திண்டிவனத்தில் முஸ்லிம் மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றதுநகர செயலாளர் அப்துல் ஹக்கீம் DECE, Bsc.,IT., தலைமை தாங்கினார்.   வானூர் தொகுதி செயலாளர். சர்தார், வரவேற்புரையாற்றினார்.

நிர்வாகிகள் செல்வம், முருகன், நடராஜன் பழனி, காதர் பாட்ஷா, சதாம்உசேன், முகமதுஅலி, அபுதாஹீர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ஹாரூன், மாநில இளைஞரணி தலைவர் விக்ரம், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஷோக்கத் அலி, ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.


இதில் சிறப்பு அழைப்பாளராக முஸ்லிம் மக்கள் கழகத்தினுடைய நிறுவனத் தலைவர் முனைவர். ச.சு.ஜைனு தீன் கலந்து கொண்டு பழங்குடி இருளர் மக்களுக்கு 1% சதவீதம் சலுகைகளை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் அரசு வேலை, கல்வி, பொருளாதாரம் சமுதாய முன்னேற்றம். வீட்டு வசதி, நிலக்கடன், தொழில் கடன், அரசு மானியம், ஆகியவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.


இதில் முஸ்லிம் மக்கள் கழக அமைப்பின் நிர்வாகிகள் சிவகுமார், சுதா, ராமமூர்த்தி, பிரகாஷ், ரமேஷ், பாலாஜி, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் அப்துல்லா ஷரீப் D.Ted நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad