விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியத்தை சார்ந்த பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திண்டிவனம் நேஷனல் நிதி உதவி தொடக்கப்பள்ளி இரண்டு பள்ளிகளும் தமிழக அரசின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்றுள்ளது.
இவ்விருதினை பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சத்யவதி ஆசிரியர் திரு கணபதி அவர்களும் திண்டிவனம் நேஷனல் தொடக்கப்பள்ளியின் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஷீலா தேவி மற்றும் ஆசிரியர் திரு வெங்கடாசலம் அவர்களும் , ஒலக்கூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு சி.அக்சிலியம் பெலிக்ஸ் அவர்களுடன் சென்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் 3.12.2022 அன்று அண்ணா நூற்றாண்டு கலையரங்க கூட்டத்தில் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment