விழுப்புரம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் சோதனை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 16 October 2023

விழுப்புரம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் சோதனை.


விழுப்புரம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் சோதனை தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. 

மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் தொடர்ச்சியாக அரசு மணல் குவாரிகளிலும் கடந்த ஓரிரு நாட்களாகக் சோதனை தொடங்கியது. 


அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் கிராமத்தில் அரசு மணல் குவாரி உள்ளது. இந்த குவாரி தற்போது இயங்கவில்லை. இந்த மணல் குவாரியில் சோதனையிட இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெம்போ ட்ராவலர் மற்றும் 3 இனோவா கார் 30 பேர் வந்தனர். அவருடன் மத்திய அரசு போலீசும் வந்துள்ளன அவர்கள் குவாரியில் மணல் தோண்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர்


மேலும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் மணல் தோண்டப்பட்ட அளவை கணக்கிட்டனர். மேலும் டிரோன் மூலமும் மணல் குவாரியின் பரப்பளவை கணக்கிட்டு, எந்தெந்த இடத்தில் மணல் தோண்டப்பட்டுள்ளது, எவ்வளவு ஆழத்தில் தோண்டப்பட்டிருக்கிறது என்பதை கணக்கிட்டனர். இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் வல்லுனர்களும் உடன் வந்திருந்தனர்.


காலை 10 மணிக்கு  தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது, இந்த சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad