விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை என்ற பெயரில் வீட்டுக்குள் புகுந்து கலவரம் செய்து விட்டு உபயோக பொருட்களை திருடி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட ஹோட்டல் தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.
விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை ஒட்டி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஹோட்டல் மற்றும் மளிகை கடை நடத்தி வந்த தொழிலதிபர் ராயர் கடந்த நான்காம் தேதி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று வந்துள்ளார் அப்பொழுது அவர் வீட்டில் இருந்த அவரது மனைவி ஜெயா ராயர் மகன் விக்னேஷ் மற்றும் ஓட்டல் தொழிலாளர்கள் ஆகியோரை கொலை மிரட்டல் விடுத்து அரசு அலுவலர்கள் என்று சொல்லி பொருட்களை சூறையாடி அங்குள்ள சிலிண்டர் மற்றும் பருப்பு வகை உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களை திருடி சென்ற நபர்களை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலதிபர் ராயர் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment